இரயில் மோதியதில் துண்டான தலை: லண்டனில் அதிர்ச்சி சம்பவம்!!

260

417344_1
பிரித்தானியாவில் ரயில் பயணி ஒருவர் ஜன்னல் வழியே தலையே வெளியே நீட்டியதால் எதிரே வந்த ரயில் மோதி தலை துண்டான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.லண்டனின் Wandsworth Common ரயில் நிலையத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறிப்பிட்ட பயணி 20 வயது மதிக்கத்தக்க அந்த நபர் லண்டன் விமான நிலையத்தில் இருந்து விக்டோரியா நிலையத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதனிடையே அந்த நபர் ஜன்னல் வழியாக தமது தலையை வெளியே நீட்டி வேடிக்கை பார்த்து வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது எதிர்பாராதவகையில் எதிரே வந்த ரெயிலுக்கு இடையே இவரது தலை சிக்குண்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து இரண்டு ரெயிலும் உடனடியாக நிறுத்தப்பட்டு அவசர சிகிச்சை பிரிவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து பொலிசாருக்கும் மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதும், சம்பவ பகுதிக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், குறிப்பிட்ட நபரை காப்பாற்ற கடுமையான முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

ஆனால் இரு ரெயில்களுக்கும் இடையே தலை சிக்குண்டு காணப்பட்டதால், மருத்துவ குழுவினரால் அந்த நபரின் உயிரை காப்பாற்ற முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளனர்.ஏற்கனவே தலையில் பலமாக அடிபட்டு குற்றுயிராக இருந்த அந்த நபரின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் எனில் அவரது தலையை துண்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து அடையாளம் தெரியாத அந்த நபரின் தலையை மருத்துவர்கள் துண்டித்து உடலை மீட்டுள்ளனர்.இச்சம்பவம் குறித்து பிரித்தானியா போக்குவரத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பிட்ட விபத்தால் அந்த ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படவேண்டிய, வந்து செல்லவேண்டிய ஏராளமான ரெயில் சேவைகள் தடைபட்டுள்ளதாக கூறப்படுகிறது.விபத்தில் உயிரிழந்துள்ள நபர் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என கூறப்படுகிறது.