அமெரிக்காவுக்கு தகவல்கள் வழங்கிய விஞ்ஞானிக்கு மரண தண்டனையை நிறைவேற்றிய ஈரான்!!

280

Dead

அமெரிக்காவுக்கு முக்கிய தகவல்களை கொடுத்ததாக குற்றஞ்சட்டப்பட்ட அணு விஞ்ஞானிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

ஏழு ஆண்டுகளுக்கு முன், மக்காவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஷாஹ்ராம் அமிரி திடீரென காணாமல் போனார். மீண்டும் அமெரிக்காவில் அவர் தலைகாட்டிய போது, சி.ஐ.ஏ அதிகாரிகளால் தான் கடத்தப்பட்டதாக கூறினார்.

ஆனால், அங்கிருந்து தப்பி வந்ததாக அவர் கூறினார். பின், ஈரானுக்கு திரும்பிய போது, நாயகனைப் போன்ற வரவேற்பை பெற்றிருந்தார்.
பின்னாளில், விசாரணைகளுக்கு அமிரி உட்படுத்தப்பட்டார்.

தன் சொந்த விருப்பத்தின் பெயரிலேயே அமிரி அமெரிக்க சென்றதாகவும், மேலும் பல பயனுள்ள தகவல்களை தெரிவித்ததாகவும் அமெரிக்க தெரிவித்துள்ளது.