கொதிக்கும் எண்ணெயிலிருந்து கைகளால் எடுக்கப்பட்ட வடை 11 ஆயிரம் ரூபாவுக்கு ஏலம்!!

826

Vadai

தமி­ழ­கத்தின் திரு­வண்­ணா­மலை மாவட்­டத்தில் ஆதி­ப­ரா­சக்தி அம்மன் கோவிலில் பக்தர் ஒருவர் கொதிக்கும் எண்­ணெயில் இருந்து கைகளால் எடுத்த வடை 11 ஆயிரம் இந்­திய ரூபா­வுக்கு ஏலம் போயுள்­ளது.

துரிஞ்­சி­குப்பம் கிரா­மத்­தி­லுள்ள ஆதி­ப­ரா­சக்தி அம்மன் கோவிலில் அண்­மையில் 16ஆம் ஆண்டு ஆடிப்­பூரம் விழா நடை­பெற்­றுள்­ளது.

இவ்­வி­ழாவில் கொதிக்கும் எண்­ணெ­யி­லி­ருந்து கைகளால் பக்­தர்கள் வடைகள் எடுக்கும் நிகழ்ச்சியும் இடம்­பெற்­றுள்­ளது.

அவ்­வாறு எண்­ணெ­யி­லி­ருந்து எடுக்கப்பட்ட வடை­களில் 7 வடைகள் ஏலம் விடப்­பட்­டன. அதில் முதல் வடை 11 ஆயி­ரத்து 100 ரூபா­வுக்கு ஏலம் விடப்­பட்­ட­தாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.