வவுனியா பொலிஸாருடன், தாண்டிக்குளம் சிவில் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து மக்களுக்காக நேற்று முன்தினம் (07.08.2016) தாண்டிக்குளம் பிரமண்டு வித்தியாலயத்தில் சமூகத்திற்கான நடமாடும் சேவை நடைபெற்றது.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரி.கணேசநாதன் அவர்கள் கலந்து கொண்டு நடமாடும் சேவையினை ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நடமாடும் சேவையில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உப தலைவர்களில் ஒருவரும் வவுனியா நகர சபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.








