வவுனியா மூண்று முறிப்பு கிராம சேவையாளர் பிரிவில் கடையாற்றி ஒய்வுபெறும் கிராமசேவையாளர் ச.வேலுப்பிள்ளை அவர்களுக்கான பிரியாவிடையும் புதிதாக கடமைக்கு வருகைதந்திருக்கும் கிராமசேவையாளரான திரு.ஆதவன் அவர்களை வரவேற்கும் நிகழ்வும் மூன்றுமுறிப்பில் நேற்று முன்தினம் (07.08.2016) நடைபெற்றது.
இவ் விழாவிற்கு விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா மற்றும் அயல் கிராம சேவையாளர்கள், ஓய்வுநிலை கிராமசேவையாளர்கள், பகுதி சமூர்தி உத்தியோகத்தர், ஆலயங்களின் தலைவர்கள், செயலாளர்கள், அங்கத்தவர்கள் பொது அமைப்புக்களின் தலைவர், செயலாளர்கள், உறுப்பினர்கள், கிராமமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

























