வெலிமடை நுகதலாவை பிரதேசத்தில் கராஜ் ஒன்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த ஆண் ஒருவரின் சடலமொன்றினை இன்று (09.08.2016) வெலிமடை பொலிஸார் மீட்டுள்ளனர்.
குறித்த நபர் பொரகஸ் பகுதியை சேர்ந்த சுமார் 37 வயது மதிக்கத்தக்கவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
சடலம் தற்போது வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இம் மரணம் தொடர்பில் வெலிமடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






