ஒமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்கக்கோரி இன்று(10.08.2016) காலை முதல் வவுனியா ஒமந்தை பிரதேச சபைக்கு முன்பாக தா.மகேஸ்வரன் என்ற பொதுமகன் ஒருவர் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவ் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த மகேஸ்வரன்..
2010ம் ஆண்டு நகர அபிவிருத்தித் திட்டமிடல் நிபுணர் குழுவின் தெரிவுக்கு அமைவாகவும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் எட்டப்பட்ட முடிவுக்கு அமைவாகவும் பொருளாதார வர்த்தக மையம் ஓமந்தையில் அமைவதே சிறந்ததாகும்.
இதனை அரசியல் காரணங்களுக்காக அவரவர் வசதிக்கேற்ப மாற்றுவதை அனுமதிக்க முடியாது. ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தினை அமைக்கும் வரை நான் உண்ணாவிராத போராட்டத்தினை கைவிடப்போவதில்லை எனத் தெரிவித்தார்.