இளஞ்செழியனின் மற்றுமொரு கடுமையான தீர்ப்பு!!

310

ilancheliyan-judge
யாழ்ப்பாணத்தில் மாற்றுத்திறனாளி சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்திய நான்கு பேருக்கு இன்று நீதிமன்றம் 15 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.கடந்த 2009ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வைத்து மாற்றுத்திறனாளி சிறுமியொருவர் கடத்திச் செல்லப்பட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கு விசாரணைகள் யாவும் முடிவடைந்து யாழ். உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.இதன்போது சந்தேகநபர்கள் நான்கு பேரையும் குற்றவாளிகளாக தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன், தலா பதினைந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.

அத்துடன் குற்றவாளிகள் நான்கு பேரும் தலா ஐந்து இலட்சம் வீதம் பாதிக்கப்பட் சிறுமிக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்றும், இல்லாதபட்சத்தில் மேலும் இரண்டரை வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தீர்ப்பளித்துள்ளார்.இதற்கு மேலதிகமாக 25 000 வீதம் குற்றவாளிகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.