வவுனியா உக்குளாங்குளத்தில் கெங்காதரன் ஹரிஸ்ணவி என்ற 14 வயது பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்ட்டிருந்தார்.
இச் சம்பவத்தில் பாலசிங்கம் ஜனார்த்தனன் என்ற நபர் சந்தேகத்தின் பேரில் 25.02.2016 அன்று வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அதேவேளையில் வவுனியா மேல் நீதிமன்றில் குறித்த சந்தேக நபர் சார்பில் பிணை விண்ணப்பம் செய்யப்பட்டது.
அந்த பிணை விண்ணப்பத்திற்கு சட்டமா அதிபர் சார்பில் தோன்றிய அரச சட்டவாதி நிஷாந்த் நாகரட்ணம் அவர்கள் பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபினையினை தெரிவித்திருந்தார்.
எனினும் இந்த வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர் ஆறு மாதகாலம் விளக்கமறியலில் இருந்து வருவதையும் குற்றச்சாட்டு ஒன்று நிரூபிக்கப்படும் வரை எந்த ஒரு நபரும் குற்றம் அற்றவர் என்ற காரணத்தினாலும் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அவர்கள் இவ் வழக்கில் சந்தேக நபரான பாலசிங்கம் ஜனார்த்தனனுக்கு இரண்டு இலட்சம் ரூபா பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா இரண்டு ஆட்பிணை அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற வளாக பொலிஸ் நிலையத்தில் ஒவ்வொரு சனிக்கிழமையும் 9-12 மணிக்கிடையில் கையொப்பமிடுமாறும் கடவுச்சீட்டினை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் தெரிவித்து பிணை வழங்கப்படடுள்ளது.






