மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவி ஒருவர் தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ஆர்த்தி, இவர் அங்குள்ள காளி கோவிலில் தனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தி உள்ளார். தான் கனவில் கண்ட சம்பவம் அனைத்தும் நிறைவேற கடவுள் நாக்கை காணிக்கையாக கேட்டதாகவும், அதனாலேயே நாக்கை அறுத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணவியின் சகோதரர் சச்சின் பேசுகையில், கனவு குறித்து ஆர்த்தி என்னிடம் பேசினாள், கோவிலுக்கு சென்று நாக்கை காணிக்கை செலுத்த உள்ளதாகவும் கூறிய போது எனக்கு பெரிய விடயமாக தெரியவில்லை.
சும்மா விளையாட்டாக கூறுகிறாள் என்று தான் நினைத்தேன், என்னுடன் பிறந்த சகோதரி இப்படி மூடநம்பிக்கையில் மூழ்கி இருப்பார் என கனவிலும் கூட நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மாணவி நாக்கை அறுத்துக் கொண்டதும் மயக்கமடைந்துள்ளார். எனினும் அருகில் இருந்த பூசாரி மற்றும் மக்கள் அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் விளக்கு மற்றும் ஊதுவர்த்தியை ஏற்றி வைத்ததாக தெரிகிறது.
இதுபற்றி தகவல் தெரிந்ததும் விரைந்து வந்த மருத்துவ அதிகாரிகள் அவளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர்.








