றியோ டி ஜெனீரோவில் இடம்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் நேற்று இடம்பெற்ற 64kg (light welterweight ) பிரிவு குத்துசண்டைப் போட்டியில் மொங்கோலியரான CHINZORIG BAATARSUKH வீரருடன் ஈழத்தமிழரான துளசி தர்மலிங்கம் மோதிய முதலாவது போட்டியில் 03:00 என்ற நிலையில் தோல்வியைத் தழுவியுள்ளார்.
பருத்தித்துறை- புலோலியைச் சேர்ந்த நளினி, தர்மலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி (மாறன்), கடந்த ஆண்டு வரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி இருக்கிறார்.
கடந்த ஜூலை 7 ஆம் திகதி அன்று நடந்த Light Welterweight பிரிவில் மூன்று சுற்றுகளாக நடந்த போட்டியில் ஆர்ஜென்ரினா நாட்டைச் சேர்ந்த Carlos Aquino என்ற வீரரை 3-0 என்ற புள்ளியில் வென்று றியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.







