வவுனியாவில் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் பாடசாலை அதிபருக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை!!

920

Vavuniya-Court

வவுனியா கண்ணாட்டிக்கணேசபுரம் பாடசாலையில் தரம் 1ல் கல்வி கற்ற மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கும் செயலில் ஈடுபட்ட பாடசாலை அதிபர் ஆனந்தன் தர்மசீலன் (வயது 51) என்பவருக்கு 20 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன தீர்ப்பு வழங்கினார்.

2011ம் ஆண்டு இடம்பெற்ற குற்றச் செயலுக்கு நீதவான் நீதிமன்றில் ஆரம்ப விசாரணைகளை அடுத்து 2014ம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றுக்கு பாரப்படுத்தப்ட்டிருந்த வழக்கை அரச சட்டவாதி நிஷாந் நாகரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.

இவ் வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமி வழங்கிய சாட்சியத்தின் அடிப்படையில் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு அப்பால் நீரூபிக்கப்பட்டமையால் எதிரியைக் குற்றவாளியாகக்கண்டு மேற்படி தீர்ப்பை மேல் நீதிமன்ற நீதிபதி வழங்கினார்

தண்டப்பணமாக 5000 ரூபாவும் நஷ்டஈடாக குறித்த சிறுமிக்கு 200 000 ரூபா வழங்குமாறும் வழங்கத்தவறினால் மேலும் இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.