பாலியல் வன்கொடுமைகள் குறைய பீர் குடிங்க! பிரபல நடிகை ஆலோசனை!!

311

Poonam-Pandayபாலியல் பலாத்காரங்களுக்கு என்ன தீர்வு காண்பது என்று எல்லோரும் கைபிசைந்து நிற்கிற நேரம் ஜில்லென்று ஒரு தீர்வு சொல்லியிருக்கிறார் பூனம் பாண்டே.

பீர் பார்களை திறவுங்கள் பாலியல் வன்கொடுமைகள் குறைந்திடும் இதுதான் பூனத்திண் கண்டுபிடிப்பு. மும்பை பெண் புகைப்பட கலைஞர் பாலியல் பலாத்காரத்தால் இந்தியா கொந்தளித்துப் போயுள்ளது.

பூனம் பாண்டேயை போல் கவர்ச்சியாக போஸ் கொடுப்பதும், நடிப்பதும்தான் பாலியல் பலாத்காரங்கள் பெருக காரணம் என ஒரு கலாச்சார காவலர் குரூப் குற்றம்சாட்டியதும், உடம்பில் இருக்கிற ஒன்றரையடி துணியையும் வ‌ரிந்துகட்டி சண்டைக்கு வந்துவிட்டார் பூனம்.

நான் போடுற ஆடைதான் பாலியல் பலாத்காரங்களுக்கு காரணம் என்றால் நான் ஊடகத்துக்கு வர்றதுக்கு முன்னாடி மட்டும் கற்பழிக்காமலா இருந்தாங்க? பெண்கள் போடுற ஆடைதான் ஆண்களை செடியூஸ் பண்றதுங்கிறது எந்த விதத்தில் நியாயம்?

அஞ்சு வயசு குழந்தையைக்கூட துஷ்பிரயோகம் பண்றாங்களே. நான் சும்மா பேசுவேன், எதுவும் செய்ய மாட்டேன். ஆனா இங்க நிறைய பிரபல நடிகைகள் இருக்காங்க. என்னைவிட ஐட்டம் டான்சில் அவங்கதான் அதிகம் எ‌க்ஸ்போஸ் பண்றாங்க என்று ஒரேயடியாக போட்டு வாங்கியிருக்கிறார்.

பிரச்சினையை பேசினால் போதுமா? தீர்வு சொல்ல வேண்டாமா? பீர் பார்களை திறந்தால் இந்த பாலியல் வன்னொடுமைகள் எல்லாம் ஒரேயடியா குறைஞ்சிடும் என்றிருக்கிறார் பூனம்.