வவுனியாவில் அரசியல் கைதியின் குடும்பத்துக்கு சாந்தநாயகி நற்பணி மன்றம் மூலம் உதவி!!

829

 
சுமார் 10 வருடங்களுக்கு மேலாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் அரசியல் கைதியான சு.செந்தூரன் அவர்களின் குடும்பம்.

யாப்பாணத்தில் இருந்து 1990 இல் இடம் பெயர்ந்து வவுனியா நாகர்இலுப்பை குளத்தில் தட் காலிகமாக வசித்து வரும் நிலையில் வவுனியா பிரதேச செயலகத்தால் ஓமந்தை கள்ளிகுளத்தில் அவரின் குடும்பத்துக்கு ஒரு ஏக்கர் காணி வழங்கப்பட்டுள்ளது .

அவரின் தந்தையான பெருமாள் சுப்பிரமணியம், தாய் தங்கமணி, தங்கை காயத்திரி, தம்பி ஆரூரன், ஜெயரூபன் என அவரது குடும்பத்தின் மூத்த பிள்ளையான செந்தூரன் 2006.07.13 இல் கைது செய்யப்பட்டு பிணை வழங்க முடியாது என மறுக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் ஒருவர்.

மகனின் பிரிவால் மனம் பாதிக்கப்பட்டுள்ள தந்தை, இளைய மகன் ஆருரனின் உழைப்பில் அன்றாட வாழ்வுக்கே சிரமமான நிலையில் வழங்கப்பட்டுள்ள காணியில் ஒரு குடிசை போட உதவுமாறு தமிழ் விருட்சம் ஊடாக சாந்தநாயகி நற்பணி மன்றத்திடம் வேண்டுகோளை விடுத்து இருந்த நிலையில் சாந்தநாயகி நற்பணி மன்றம் 20 000 பெறுமதியான தகரம், கிடுகு, மணல், சீமெந்து உட்பட்ட பொருட்களை நேற்று முன்தினம் (09.08.2016) வழங்கியது.

சாந்தநாயகி நற்பணி மன்றத்தின் இந்த உதவிகளை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன்), செயலாளர் மாணிக்க ஜெகன் ஆகியோர் செந்தூரனின் தாயார் தங்கமணியிடம் கையளித்தனர்.

1 13932089_1248920238485529_1733930572_o 13932116_1248920448485508_792465045_o 13932117_1248920281818858_718754518_o 13932156_1248920615152158_1308435603_o 13932244_1248999601810926_1053786613_o 13939987_1248920608485492_1533521821_o 13950699_1248999808477572_1844318590_o 13950816_1248920385152181_929477679_o 13950942_1248920408485512_1926327551_o 13978045_1250389101671976_87138229_o 13978268_1248920845152135_1358699844_o 13978402_1248920475152172_1633786009_o 13987915_1248920355152184_439814888_o 14001704_1248920771818809_1752183714_o