தயா மாஸ்டர் எண்டு அழைக்கப்படும் தயாநிதிக்கு 4 அரச அலுவலர்களின் பிணையில் வீடு செல்லலாம் என வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று அனுமதியளித்திருந்த நிலையில் இன்று 4 பிணையாளர்கள் இல்லாமையால் தயாநிதி மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவரின் மனுவை நேற்று விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம் 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும் 4 அரச ஊழியர்களின் சரீரப் பிணையிலும் செல்ல சந்தேக நபரான தயாநிதிக்கு நீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.
ஆயினும் பிணையாளர்களை நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவிற்கமைய தகுதியான 4 பிணையாளர்களை நீதிமன்றத்தில் நிறுத்த முடியாத நிலை சந்தேகநபரான தயாநிதிக்கு ஏற்பட்டதனையடுத்து தயாநிதியின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.






