ஏமாற்றிய காதலனை பொலிசில் சிக்க வைக்க காதலி நடத்திய நாடகம்!!

688

Lady

தமிழகத்தில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றிய காதலனை பொலிசில் சிக்க வைக்க காதலி நாடகம் நடத்தியுள்ளது அம்பலமாகியுள்ளது.

நாகர்கோவிலின் ராமன் புதூரை சேர்ந்த மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார்.

இவரும், ஜோ என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர், ஒன்றாக பல இடங்களுக்கு ஊர் சுற்றியுள்ளனர். சம்பவத்தன்று படம் பார்க்க தியேட்டருக்கு சென்ற போது உல்லாசமாக இருந்துள்ளனர்.

படம் முடிந்து வெளியே வந்த போது, மாணவியை தனியாக விட்டு விட்டு ஜோ சென்றதாக தெரிகிறது. வெகு நேரம் ஆகியும் ஜோவை காணவில்லை, தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும் போனை எடுக்கவில்லை.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பெண், பெற்றோருக்கு போன் செய்து கல்லூரியில் இருந்து வரும் வழியில், தனக்கு மயக்கு மருந்து கொடுத்து நபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து விரைந்து வந்த அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதுடன் பொலிசில் புகார் அளித்தனர்.

விசாரணையில் அப்பெண் காதலித்து ஏமாற்றப்பட்டதாகவும், காதலனை பிடிப்பதற்காகவே பாலியல் பலாத்காரம் நாடகம் நடத்தியது பொலிசாருக்கு தெரியவந்தது.

அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்தி காதலன் ஜோ வை தேடி வருவதாக கூறப்படுகிறது.