வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு : குப்பைகளால் நிறைந்து துர்நாற்றம் வீசும் வவுனியா நகரம்!!

223

 
கடந்த 10.08.2016 புதன்கிழமை முதல் கடமைக்கு செல்லாமல் வவுனியா நகரசபை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டமையால் வவுனியா நகரம் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன.

குறிப்பாக வவுனியா பேரூந்து நிலையம், மீன் சந்தை, கோழி இறைச்சி நிலையங்களில் உள்ள கழிவுகள் அகற்றப்படாமையினால் பாரிய துர்நாற்றம் வீசுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். இவ் விடயம் தொடர்பாக வர்த்தகர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியா நகரசபை ஊழியர்களின் இவ்வாறான பணிபுறக்கணிப்பினால் பாதிக்கப்படுவது மக்களாகிய நாங்கள் தான். இறைச்சி விற்பனை நிலையத்திற்கு செல்ல முடியவில்லை பாரிய துர்நாற்றம் வீசுகின்றது. உரிய அதிகாரிகளே உரிய நடவடிக்கை எடுங்கள் எனத் தெரிவித்தார்.

1 IMG_1672 IMG_1673 IMG_1675 IMG_1676 IMG_1677 IMG_1678