சென்னை அணி கிண்ணத்தை வெல்லும் : அஷ்வின் நம்பிக்கை!!

333

Ashwin_2

சம்பியன்ஸ் லீக் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சென்னை அணி கிண்ணத்தை வெல்ல உதவுவோம் என சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளில் நடந்த முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கு பின் ஓய்வில் உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் சமீபத்தில் கிடைத்த ஓய்வை குடும்பத்துடன் செலவிட்டேன்.

தற்போது மீண்டும் களத்துக்கு திரும்பியுள்ளேன். எனது முழுத்திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அடுத்த மாதம் தொடங்கும் சம்பியன்ஸ் லீக் தொடரில் சென்னை அணிக்கு எனது பங்களிப்பை கொடுக்க வேண்டும்.

மிக உற்சாகத்துடன் விளையாடி கிண்ணத்தை கைப்பற்ற வேண்டும்.
சிம்பாவே தொடரில் அமித் மிஸ்ரா, ரவிந்திர ஜடேஜா இருவரும் சிறப்பாக செயல்பட்டனர். இதில் சமீபத்தில் ஜடேஜா மிகவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

நாங்கள் மூவரும் ஒருங்கிணைந்து அணியின் வெற்றிக்கு உதவுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

கடந்தாண்டு அங்கு விளையாடிய போது 3 டெஸ்டில் 10 விக்கெட் மட்டுமே வீழ்த்தினேன். இம்முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.