திருச்சி அருகே கோர விபத்து : 8 பேர் பலி : வீதியில் சிதறிக் கிடக்கும் சடலங்கள்!!(அதிர்ச்சிப் படங்கள்)

688

1

திருச்சி- மணப்பாறை அருகே உள்ள கைகாட்டி எனும் இடத்தில் இன்று வெள்ளிக்கிழமை நண்பகலில் நடந்த வீதி விபத்தில் 8 பேர் பலியாகினர். அதில் பலர் படுகாயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் திருமலைகேணி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களது நண்பா்கள், உறவினர்கள் என 25 பேர் வேனில் திருச்சி மாவட்டம் மணப்பாறை கோவில்பட்டி அருகேயுள்ள உப்பிலியம்மன் கோயிலுக்கு கிடாவெட்டு திருவிழாவிற்கு வேனில் வந்துக்கொண்டிருந்தனர்.

இவர்கள் இன்று நண்பகலில் வளநாடு கைக்காட்டி அருகே வந்துக் கொண்டிருந்தபோது, மதுரையிலிருந்து சென்னை நோக்கி சென்றுக்கொண்டிருந்த ஆம்னி பேருந்து அவர்களது வேனின் பின்புறம் வேகமாக மோதியதில், அந்த வேன் நிலைகுலைந்து 3 முறை தலைகுப்புற சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் வேனில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். அவர்களில் சிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 3 பேர் பலியாகினர்.
எஞ்சியவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

மேலும், இச்சம்பவத்தில், காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

2 3 4