இலங்கை பிரஜை ஒருவர் தங்கம் மற்றும் தங்க பிஸ்கட்டுக்களை கடத்த முயற்சித்த குற்றத்திற்காக பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் 100 கிராம் எடையுள்ள தங்க கட்டிகளை தன் வாயில் வைத்து மறைத்திருந்தார் எனவும் தங்க பிஸ்கட்டுக்களை அவரது பாதனியில் வைத்து கடத்த முயற்சித்தார் என சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பில் இருந்து பெங்களூரிற்கு பயணித்த 38 வயது நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த நபரை சோதனையிடுவதற்காக அதிகாரிகள் அவரிடம் உரையாடியுள்ளனர். ஆனால் அவர் தன் வாயை திறக்கவே இல்லை.
எனவே சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை சோதனையிட்ட போது இவ்வாறு தங்க கட்டிகள் மற்றும் தங்க பிஸ்கட்டுக்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் பாதணியில் இருந்து மீட்கப்பட்ட தங்க பிஸ்கட்டுக்கள் 3 இலட்சத்து 17 ஆயிரம் பெறுமதி வாய்ந்தது என சுங்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை ஆகஸ்ட் 8ம் திகதி தங்கம் கடத்துவதில் ஈடுப்பட்ட 7 இலங்கை பிரஜைகள் பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






