தாயை எரித்து கொன்ற தந்தை : சமூக வலைதளத்தில் நீதி கேட்கும் மகள்கள்!!

885

Fire

தந்தை தனது தாயை கண் எதிரே தீ வைத்து எரித்துக் கொன்றதை பார்த்த மகள்கள் சமூக வலைதளத்தில் தங்களது அவல நிலையை கூறி நீதி கேட்டு வருகின்றனர்.

உத்திர பிரதேச மாநிலம் தேவிபுரா பகுதியைச் சேர்ந்த மனோஜ் பன்சால் என்பவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த சகோதரிகள் இருவரும் தங்கள் கண்ணெதிரே தாயை தீ வைத்து எரித்து கொன்று விட்டனர் என தனது தந்தை மீது புகார் அளித்து உத்திர பிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவிற்கு கடந்த யூன் மாதம் புகார் மனு ஒன்றை எழுதியுள்ளனர்.

அந்த புகாரில், தனது தந்தை மற்றும் சில அடியாட்கள் எங்கள் கண் முன்னே தாயை உயிருடன் தீ வைத்து எரித்து விட்டனர் எனக் குறிப்பிட்டிருந்தனர். ஆனால், இதுவரை அந்த புகார் மனு பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், பொலிசார் குற்றவாளிகளை இன்னும் கைது செய்யவில்லை எனவும் கூறி அந்த இரண்டு சிறுமிகளும் சமூக வலைதளத்தில் நீதிகேட்டு வருகின்றனர்.

இது குறித்து எஸ்.பி மான்சிங் சௌகான் கூறுகையில், இது தொடர்பாக குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம். மீதமுள்ள குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுமிகள் இருவருக்கும் பாதுகாப்பு மற்றும் நிதியுதவி அளிப்பது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் பரிந்துரைக்கப்படுகிறது என கூறியுள்ளார்.