வவுனியா மன்னார் வீதியில் நேற்று (12.08.2016) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த குமாரசாமி ரமணகுமார் என்ற 39 வயது குடும்பஸ்தர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
நேற்றைய தினம் வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய பூவரசங்குளம் பகுதியை சேர்ந்த குமாரசாமி ரமணகுமார் என்ற குடும்பஸ்தரை பூவரசங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
எனினும் போதிய வசதிகள் பூவரசங்குளம் வைத்தியசாலையில் இன்மையினால் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.