ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும் என வலியுறுத்தி தா.மகேஸ்வரன் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப் போராட்டம் நேற்று (12.08.2016) இரவு 9.20 மணியளவில் கைவிடப்பட்டது.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வட மாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், த.குருகுலராசா, ப.சத்தியலிங்கம் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர்கள் எம்.தியாகராசா, ஜி.ரி.லிங்கநாதன், ஆர்.இந்திரராசா, முதலமைச்சரின் செயலாளர் திருமதி வி.கேதீஸ்வரன் ஆகியோர் உண்ணாவிரதம் இடம்பெற்ற இடத்திற்கு சென்று தா.மகேஸ்வரனை பார்வையிட்டதுடன் உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் கோரிக்கை விடுத்தனர்.
முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தொலைபேசி மூலமாக ஓமந்தையில் மத்திய நிலையத்தினை அமைப்பதற்கு தன்னாலான முயற்சியை எடுப்பதாக கூறியதை அடுத்து நீராகாரம் வழங்கி உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.