வவுனியா பூவரங்குளத்தில் நேற்றைய தினம் (12.08.2016) கிணற்றில் வீழ்ந்து 6 வயதுச் சிறுவன் பலியாகியுள்ளார். இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா பூவரசங்குளத்தில் நேற்றையதினம் (12.08.2016) பாடசாலை முடிந்தவுடன் வீடு திரும்பிய தவச்செல்வம் தனுசன் என்ற 6 வயதுச் சிறுவன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் தவறுதலாக வீழ்ந்து பலியாகியுள்ளார்.
குறித்த சிறுவன் அவரது தங்கையுடன் விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் தாயாரிடம் தேனீர் கேட்டுள்ளார். தாயார் தேனீர் தயார் செய்ய சென்ற சமயத்திலியே குறித்த சிறுவன் கிணற்றில் வீழ்ந்துள்ளார்.
சடலம் பிரதே பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.