சீனாவில் பல வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து : பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு!!

367

China

கிழக்கு சீனாவில் பாரம் ஏற்றிவந்த ஒரு டிரக்டர் அடுத்தடுத்து இரு பஸ்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின்மீது மோதிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஷங்டாங் மாகாணத்தின் முக்கிய நகரான ஜிபோ பகுதியில் கடந்த வியாழக்கிழமை பாரம் ஏற்றிவந்த ஒரு டிரக்டர் வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து இரு பஸ்கள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக சீன ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவத்தில் காயமடைந்த 20க்கும் அதிகமானோர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன.