மகியங்கனை, தியபான குளத்தில் இருந்து நபர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் திஸ்ஸபுர பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த நபரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
31 வயதுடைய ரிதிமாலியத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், மகியங்களை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






