காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டார்!!

508

Body

மகியங்கனை, தியபான குளத்தில் இருந்து நபர் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் திஸ்ஸபுர பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்று கவிழ்ந்ததில் காணாமல் போயிருந்த நபரே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து 5 கிலோமீற்றர் தொலைவில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

31 வயதுடைய ரிதிமாலியத்த பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

பிரேத பரிசோதனை இன்று இடம்பெற உள்ளதுடன், மகியங்களை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.