வானத்தை நோக்கிப் பறந்த காட்டுப்பன்றிகள் : அதிர்ச்சி நிமிடங்கள்!!

640

PIG

டெக்சாஸ் மாநிலத்தில் கூட்டமாக நின்று உணவருந்தி கொண்டிருந்த காட்டுப்பன்றிகளை நோக்கி நபர் ஒருவர் குறிபார்த்து சுட்டதில், பன்றிகள் வானத்தை நோக்கி பறந்து தரையில் வந்து விழுந்துள்ளன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்வதற்கு சட்டரீதியான முறையில் அபாயகரமான ஆயுதங்களை பயன்படுத்தலாம்.

ஆனால் எக்காரணம் கொண்டும் விஷம் கலந்த மருந்துகள், விஷரீதியான ஆயுதங்கள் போன்றவற்றை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெக்சாஸ் மாநிலத்தில் முகாம் ஒன்றினை அமைத்துள்ள விலங்குகளை வேட்டையாடும் கும்பல், தங்கள் கண்ணெதிரே மேய்ந்துகொண்டிருக்கும் காட்டுப்பன்றிகளை குறிபார்த்து சுடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

அதன்படியே, இவர்கள் நின்றுகொண்டிருக்கும் இடத்திலிருந்து சற்று தொலைதூரத்தில் காட்டுப்பன்றிகள் மேய்ந்துகொண்டிருக்கின்றனர்.
அப்போது இந்த கும்பலில் ஒருவர், துப்பாக்கியினை கொண்டு, அந்த பன்றிகளை நோக்கி குறிபார்த்து இண்டு முறை சுடுகிறார்.

இந்த குண்டுகள், பெருமளவில் வெடித்து சிதறும் வீரியம் கொண்டவை என்பதால், குண்டுகள் அந்த பன்றிகளை நோக்கி பாய்ந்த நொடியில், தரையில் இருந்து பெரும் புழுதி கிளம்பி, காட்டுப்பன்றிகள் வானத்தை நோக்கி பறந்து தரையில் வந்து விழுகின்றன.

இதனைப்பார்த்த வேட்டைக்காரர்கள் சியர்ஸ் சொல்லி சிரிக்கின்றனர். டெக்சாஸ் மாநிலத்தில் 2.6 மில்லியன் அளவு பன்றி காய்ச்சல் வைரஸ் பரவியுள்ளது.

தற்போது இதன் தாக்கம் அதிகரித்து வருவதால் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அங்கு சட்டரீதியான முறையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.