ரத்தத்தால் முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய சிறுமி!!

712

Letter

உத்திரபிரதேச மாநிலத்தில் தனது தாயாரை கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சிறுமி ஒருவர் முதலமைச்சருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேசத்தை சேர்ந்த லத்திகா என்ற சிறுமி அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்க்கு தனது ரத்தத்தால் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் என் அப்பாவின் தாயார் ஆண் குழந்தை இல்லை என்கிற காரணத்தினால் எங்கள் அம்மாவை தொடர்ந்து சித்ரவதை செய்து வந்தார். என்னையும் மற்றும் என் சகோதரியையும் கொடுமைப்படுத்தி வந்தார்.

இதனால் மனமுடைந்த நாங்கள் தனியாக சென்று ஒரு வீட்டில் வசித்து வந்தோம். எங்கள் அப்பா மட்டும் தங்களை அவ்வப்போது பார்த்து விட்டு செல்வார்.

ஆனால் திடீரென்று என் அப்பாவின் தாயார் மற்றும் சிலர் வந்து என் அப்பாவிற்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்போகிறோம், நீ அவனை விட்டு விலகிசெல் என்று அம்மாவை மிரட்டினர்.

ஆனால் அம்மா அதற்கு ஒத்துழைப்பு தராததால் எங்கள் அம்மாவை எங்கள் கண் முன்னே மண்ணென்ணெயை ஊற்றி எரித்து கொன்று விட்டனர்.

இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் பொலிசார் எங்கள் அம்மா தற்கொலை செய்து விட்டதாக எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளனர்.

ஆகவே எங்கள் அம்மாவை கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், அதற்கான நீதி கிடைக்க வேண்டும் என தனது ரத்தத்தால் மனம் உருகி எழுதியுள்ளார்.

இது அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ்க்கு தெரிந்ததையடுத்து, உடனடியாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.