முத்துக்குமாரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை!!

877

Muthukumar

பிரபல தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் (41), இன்று காலை காலமானார்.

கடந்த ஒரு மாதமாகவே மஞ்சள் காமாலை நோயால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நா.முத்துக்குமார் இன்று காலை சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து இறைவனடி சேர்ந்தார்.

தற்போது, அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டின் கீழ் பகுதியில் பொதுமக்களின் அஞ்சலிக்கா வைக்கப்பட்டிருக்கும் நா.முத்துக்குமாரின் உடலுக்கு பொதுமக்களும், திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து இன்று மாலை 06.00 மணியளவில் நியூ ஆவடி ரோடு வேலங்காடு மைதானத்தில் நா.முத்துக்குமாருக்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.