நாயை கடித்துக் குதறிய மனிதனுக்கு பொலிசார் வலைவீச்சு!!

431

dog

தமிழ்நாட்டில் நாயை கடித்து மருத்துவமனைக்கு அனுப்பிய குடிகாரனை பொலிசார் தேடி வருகின்றனர்.

சென்னை ஆர்.ஏ.புரம் பக்ஸ் ரோடு பகுதியில் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே ஒரு நாய்க்குட்டியானது வாடிக்கையாக அந்த இடத்திலேயே இருக்கும்.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குமார் என்பவர் போதையில் நடந்து சென்றபோது அவரைப் பார்த்து நாய்க்குட்டி குரைக்க ஆரம்பித்துள்ளது.

கடுப்பான குமார் நாய்க் குட்டியை கல்வீசி தாக்க முயன்றார். அப்போதும் விடாமல் நாய்க்குட்டி குரைத்துள்ளது. போதையில் இருந்த குமாருக்கு என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் நாய்க்குட்டியை பிடித்து காதை கடித்து துப்பி நாய்க்குட்டியை தூக்கி வீசியுள்ளார்.

கீழே விழுந்த நாய்க்குட்டி வலியால் கூச்சலிட்டது. சத்தம் கேட்டதும் ஆட்டோ ஒட்டுனர் கிருஷ்ணமூர்த்தி ஓடிவந்து பார்த்தபோது நாய்க்குட்டி காதில் ரத்தம் வழிய அலறிக் கொண்டிருந்தது. உடனே கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

மேலும் பொலிசில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் அபிராமபுரம் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.