இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகளை காண்பதற்காக அங்கு சென்றுள்ள ஜப்பானிய பெண்ஒருவரிடம் இலங்கையர் என்று அடையாளப்படுத்திக்கொண்ட வழிகாட்டுனர் ஒருவர், அவருடையஉடமைகளை கொள்ளையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10ம் திகதியன்று குறித்த பெண், இந்தியாவுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து இலங்கையர்,ஒருவர் அவர் வழிகாட்டுவதாக கூறி உறுதியளித்துள்ளார்.
தாம் இலங்கையின் தேங்காய் விற்பனையில் ஈடுபட்டதாகவும் வாழ்க்கையை கொண்டுசெல்லமுடியாத நிலையில் புதுடில்லிக்கு வந்த வழிகாட்டுநனராக செயற்படுதாகவும் ஜப்பானியபெண்ணிடம் இலங்கையர் தெரிவித்துள்ளார்.
தனையடுத்து குறித்த இலங்கையர், ஜப்பானிய பெண்ணை பழக்கமற்ற பல இடங்களுக்குஅழைத்துச் சென்றுள்ளார்.
அந்த இடங்கள், ஜப்பானிய பெண்ணுக்கு பிடிக்கவில்லை என்ற அடிப்படையில் ஒருவாறு அவரின் நம்பிக்கையை இலங்கையர் பெற்றுக்கொண்டார்.
இதனையடுத்து அடுத்தநாள் வெளியிடம் ஒன்றுக்கு ஜப்பானிய பெண்ணை அழைத்துச் சென்றஇலங்கையர், அவருக்கு பானம் ஒன்றை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்த பானத்தை அருந்திய ஜப்பானிய பெண், சரோஜின் நகர் பகுதியில் மயங்கிய நிலையில்அவரிடம் இருந்த 15ஆயிரம் ரூபா பணம், புகைப்படக்கருவி மற்றும் விலையுயர்ந்த தொலைபேசிஆகியவற்றை குறித்த இலங்கையர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளார்.






