வீட்டுத் தோட்டத்தில் இருந்து சிசுவின் சடலம் கண்டெடுப்பு!!

1230

body

தங்கல்ல ரன்ன கோடயிம்புரவ்ததை பகுதியிலுள்ள வீட்டு தோட்டத்தில் இருந்து சிசுவின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பிரதேசவாசி பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமையவே பொலிஸார் இந்த சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.

நேற்று காலை குறித்த சிசு பிறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

குழந்தையை பிரசுவித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் 21 வயதுடைய யுவதி பொலிஸ் பாதுகாப்பின் கீழ் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளார்.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.