இலங்கையில் பெரும்பாலானோர் சோம்பேறிகள்!!

744

lazy-man

இலங்கையில் உள்ளவர்களில் பெரும்பாலானோர் சோம்பேறிகள் என ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது.

இவர்கள் சராசரி நாளாந்தம் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளை செய்யாமல் இருப்பதற்கு நான்கு காரணங்களை முன்வைப்பதாகவும் குறித்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

எல்.எம்.ஆர்.பீ என்ற இலங்கை மர்கட் ஆய்வு பியுரோ நிறுவனமே இந்த ஆய்வு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

இதில் 80 வீதமானோர் நேரமின்மையால் தினசரி கடமைகளை செய்ய தவறுவதற்கான காரணமாக குறிப்பிட்டுள்ளதுடன், 45 வீதமானோர் பயம், குறித்த காரியத்தை தம்மால் வெற்றிகரமாக செய்து முடிக்க முடியுமோ என்ற சந்தேகத்தினால் செய்யாமல் இருப்பதாகவும் குறித்த ஆய்வு தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த வேலைகளை செய்ய முயற்சித்து தோல்வியடைந்தோர் 38 வீதமும், குறித்த நாளாந்த கடமையை அல்லது வேலையை செய்வதற்கு தெரியாதவர்கள் 26 வீதம் என்றும் குறித்த ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.