இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று(17.08.2016) காலை ஆரம்பமானது.
செயலணிக் குழுவின் முன் ஆஜராகிய பொதுமக்கள் தமது குறைபாடுகளை வாய்மொழி மூலமும், எழுத்து மூலமும் வெளியிட்டதுடன், வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
செயலணியின் அமர்வு இன்று ( 17.08.2016) காலை 8:30 தொடக்கம் மாலை 4.30 மணிவரை வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
வவுனியா நெற் செய்திகளுக்காக வவுனியா பிரதேச செயலகத்திலிருந்து எமது பிராந்திய செய்தியாளர்.



















