82 வயதான முதிய பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் காலி, மீட்டியாகொடை பிரதேசத்தில் நடந்துள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைது செய்வதற்காக மீட்டியாகொடை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மீட்டியாகொடை தெற்கு தெல்வத்தை என்ற பிரதேசத்தில் வசித்து வரும் திருமணமாகாத முதிய பெண்ணே இந்த சம்பவத்தை எதிர்நோக்கியுள்ளார்.
முதிய பெண் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளதுடன் அருகில் சில உறவினர்களின் வீடுகளும் உள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி இரவு 7 மணியளவில் சந்தேக நபர் வீட்டுக்குள் புகுந்துள்ளதுடன், இரவு முழுவதும் பெண்ணை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் குறித்து முக்கியமான பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த தகவல்களின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மீட்டியாகொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






