வவுனியா வலயக்கல்வி அலுவலகத்தில் வலயக்கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்ற திருமதி செ.அன்ரன் சோமராஜாவிற்கு அவரது சேவையை கௌரவித்து சேவை நலன் பாராட்டு விழாவும் மணிவிழாவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று(17.08.2016) காலை வவுனியா நகரக் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராஜ் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் அவரது சேவையை கெரவித்து வாழ்த்துரை, கவிதைகள் நடனங்கள் என்பனவும் இடம்பெற்றன
இன் நிகழ்வில் புதிதாக வவுனியா தெற்கு கல்வி வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையேற்ற முத்து இராதாகிருஸ்ணன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வடமாகாணசபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, ஜி.ரி.லிங்கநாதன், வடமாகாண கல்வியமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.ரவீந்திரன், வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் உதயகுமார், வவுனியா வடக்கு கல்விப்பணிப்பாளர் சிறிஸ்கந்தராஜா, வவுனியா பிரதேச செயலளார் கா.உதயராஜா மற்றும் வலயக் கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.












