பலப்பிட்டியவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கடலில் மூழ்கி உயிரிழப்பு!!

999

Body

கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று பலப்பிட்டியவில் நேற்று முந்தினம் (17.08) இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒருவர் காணாமற்போயுள்ளதுடன் அவர் பற்றிய தகவல்களேதும் இதுவரை கிடைக்கவில்லை. உயிரிழந்தவர்களில் ஒருவரின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டது.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பாடசாலை மாணவரொருவரும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மீட்கப்பட்ட சடலம் தரம் 10 இல் கல்வி பயிலும் லக்ஷானி வாஸனா என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.