நுவரெலியா மாவட்டத்தில் டயகம பிரதேசத்தை சேர்ந்த நடராஜா இமாசுதன் என்ற இளைஞரொருவர் புத்தாக்க ஆணைக்குழுவினால் ஜனாதிபதி விருதை பெற்றுக்கொள்வதற்கு தெரிவாகியுள்ளார்.
Gsm controller என்ற இந்த சாதனத்தினூடாக கைத்தொலை பேசிக்கு ஒலிசமிக்ஞை செய்யக்கூடிய சிறந்த உபகரணத்தை கண்டுபிடித்தமைக்காகவே இந்த விருது வழங்கப்படவிருக்கின்றது.
இவர் கண்டுபிடித்த இந்த சாதனத்தை கொண்டு உயிர் உடைமைகளுக்கு பாதுகாப்பினை வழங்க முடியுமென இமாசுதன் தெரிவிக்கின்றார்.
இதைப்போன்ற சாதனம் இன்னும் உருவாகவில்லை எனவும், இக்கருவியை முழுமையாக நிறைவு செய்வதற்கு பல தடைகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், இவர் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கல்வி கற்று, தற்போது திறந்த பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.








