வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (19.08.2016) காலை 9.00 மணியளவில் ஏற்ப்பட்ட முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
மன்னார் வீதியுடாக வவுனியா நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிலை அதே வழியில் பயணித்த முச்சக்கரவண்டி முந்திச் செல்ல முற்ப்பட்ட சமயத்தில் முச்சக்கரவண்டி கட்டுப்பாட்டையிழந்து மோட்டார் சைக்கிலிலுடன் மோதுண்டு அருகே காணப்பட்ட வாடிகாலிலும் மோதுண்டு விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போக்குவரத்துப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.