வவுனியா மாவட்ட செயலகத்தில் குண்டு மீட்பு : அதிரடிப்படையினர் குவிப்பு!!

854

 
வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து இன்று (20.08.2016) பிற்பகல் 3.40 மணியளவில் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

வவுனியா மாவட்ட செயலத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிட நிர்மாணப்பணியின் போது கட்டிட நிர்மாணப் பணியாளர்கள் குண்டு ஒன்றை மீட்டனர்.

இச் சம்பவத்தை உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த சுமிச், அஸ்வின் ஆகிய வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் நிர்மாணப்பணியாளர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து சென்றதுடன் விஷேட அதிரடிப்படையினருக்கு அறிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிரடிப்படையினர் குண்டை மீட்டதுடன். இக் குண்டு பல வருடம் பழைமை வாய்ந்தது என தெரிவித்தனர்.

1 DSC_0071 DSC_0072 DSC_0073 DSC_0074 DSC_0075 DSC_0076 DSC_0077 DSC_0078 DSC_0080 DSC_0081 DSC_0082 DSC_0083 DSC_0088