வவுனியாவில் வடகிழக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்டப் போட்டி!!

1692

 
தமிழ் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு நடாத்தும் சக்கரநாற்காலி கூடைப்பந்தாட்டப்போட்டி ஜெயகாந்தன் (உயிரிழை முள்ளந்தண்டுவடம், பாதிப்புற்றோர் அமைப்பு) தலைமையில் நேற்று (20.08.2016) சனிக்கிழமை வவுனியா நகரசபை கூடைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினர்களாக திரு.திரேஸ்குமார் (மேலதிக அரசாங்க அதிபர், வவுனியா), சிறப்பு விருந்தினர்களாக கா.உதயராசா (பிரதேச செயலாளர், வவுனியா) , கு.அகிலேந்திரன் (பணிப்பாளர், மாவட்ட பொது வைத்தியசாலை,வவுனியா) , செ.ஸ்ரீறினிவாசன் (மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், வவுனியா) , என்.பி.பர்சூக் (மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்), சோபனா (சமூக சேவை உத்தியோகத்தர், வவுனியா) மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளால் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு விருந்தினர்களால் மங்களவிளக்கேற்றி வடக்கு,கிழக்கு தமிழ் மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கரநாற்காலி விளையாட்டினை ஆரம்பித்து வைத்தனர்.

இந் நிகழ்வின் இறுதிச்சுற்று அடுத்த மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 DSC_0001 DSC_0002 DSC_0004 (2) DSC_0005 DSC_0007 DSC_0008 DSC_0009 (2) DSC_0010 DSC_0012 DSC_0013 DSC_0014 DSC_0015 DSC_0016 DSC_0017 DSC_0019 DSC_0020 (2) DSC_0020 DSC_0024 DSC_0035 DSC_0037 DSC_0038 DSC_0040 DSC_0041 DSC_0042 DSC_0043 DSC_0044 DSC_0045 DSC_0046 DSC_0052 DSC_0053 DSC_0055 DSC_0062 DSC_0068 DSC_0069 DSC_0070