களுத்துறை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். களுத்துறை கொஹோலான பகுதியை சேர்ந்த 41 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பப்பட்டுள்ளது. கொலை தொடர்பாக சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான விசாரனைகளை களுத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






