தனது மனைவி உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாத இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
அரநாயக்க பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 61 வயதுடைய குறித்த நபரின் மனைவி புற்று நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், தன் மனைவியின் உயிரிழப்பை தாங்கிக்கொள்ள முடியாத அவர் மனநிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரின் இரண்டு பிள்ளைகளும் திருமணமாகி வெவ்வேறு பிரதேசங்களில் வசித்து வரும் நிலையில், உயிரிழந்த நபர் அவரின் மாமாவுடன் வசித்து வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குறித்த நபர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் மூலம் தெரியவந்துள்ளது.






