புகையிரதங்களின் வேகங்கள் குறைக்கப்படவுள்ளன!!

583

Train SL

புகையிரத பாதைகளில் யானைகளின் குறுக்கீடுகள் அதிகளவு காணப்படும் பிரதேசங்களில்பயணிக்கும் புகையிரதங்களின் வேகங்களை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யானைகள் கடக்கும் புகையிரத பாதைகள் தொடர்பாக ஆராய்வதற்கு புகையிரத திணைக்களஅதிகாரிகளும், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் நேற்றும், இன்றும் மேற்கொண்டஆராய்வு பயணங்களின் முடிவிலேயே இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் யானைகள் புகையிரத பாதைகளை கடக்கும் பிரதேசத்தில் இரு பக்கங்களிலும்அமைந்துள்ள புதர்களை வெட்டி அகற்றுவதற்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் யானைகள் புகையிரதப் பாதைகளை கடக்கும் பிரதேசங்களை புகையிரதசாரதிகளால் இலகுவில் அடையாளங் காணக்கூடியதாக இருக்கும் எனவும் அதிகாரிகள்சுட்டிக்காட்டியுள்ளனர்.

புகையிரத பாதைகளில் யானைக் கூட்டங்களை பிரதேசவாசிகள் அவதானிக்கும்சந்தர்ப்பத்தில் அது தொடர்பில் வனஜீவராசிகள் அதிகாரிகளுக்கு தகவல்தெரிவிக்கும் முறை ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அதிகாரிகள்குறிப்பிட்டுள்ளனர்.

பிரதேசவாசிகளால் தெரிவிக்கப்படும் விடயங்களை சாரதிகளுக்கு அறிவிக்கவும்நடவடிக்கைகள் முன்னெடுக்கவுள்ளதாகவும்,இதன்மூலம் யானைகள் புகையிரதங்களில் மோதிஉயிரிழப்பதை தடுக்க முடியும் என்றும் புகையிரத திணைக்கள அதிகாரிகள்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது