ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு சென்ற சிறுவன் மற்றும் அவரது சகோதரியையும் காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட பரீட்சை மத்திய நிலையத்திற்கு சென்ற இவர்கள் பின்னர் வீடு திரும்பவில்லை என அவர்களது தந்தை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும் 10 வயது சிறுவன் மற்றும் அவரது 17 வயது சகோதரியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக, பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை குறித்த சிறுவர்களின் தாய், தந்தையை விட்டு பிரிந்து வாழ்வதால், இவர்கள் இருவரும் தாயை காணச் சென்றிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை நோவூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






