கைவிலங்கிட்டபடியே காதலிக்கு தாலி கட்டிய காதலன் : வினோத சம்பவம்!!

691

Mrg

பீகாரில் நபர் ஒருவர் கைவிலங்கிட்டபடியே பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

திக் விஜய் குமார் மற்றும் பூஜா ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வாரம் பூஜாவை ஆபாசமாக புகைப்படம் எடுத்த திக் விஜய், அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை அறிந்த பூஜா, தனது காதலனின் செயலை கண்டித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்ற போது, இவர்களின் காதல் கதையை கேட்ட நீதிபதி, நீ அந்த பெண்ணையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

15 நாட்கள் காலஅவகாசம் தருகிறேன், அதற்குள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அதன்படியே இதற்கு ஒப்புக்கொண்ட திக் விஜய், சிறையில் இருந்து திருமணத்திற்காக மட்டும் விடுவிக்கப்பட்டார். திருமணத்தின்போது, மாப்பிள்ளை கோலத்தில் அமர்ந்திருந்த திக் விஜய்யின், கைவிலங்குகள் அகற்றப்படவில்லை.

கைவிலங்கிட்டபடியே, தனது காதலியை திருமணம் செய்துகொண்டார், திருமணம் முடிந்த பின்னர் திக் விஜய் சிறையில் அடைக்கப்பட்டார், அப்பெண் அவளது புகுந்த வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.