பச்சிளம் குழந்தையின் மரணத்திற்கு காரணமான பெற்றோர்!!

377

baby

கனடாவில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தையின் மரணத்திற்கு காரணமாக பெற்றோரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கனடாவில் உள்ள York Regional பகுதியை சேர்ந்த மருத்துவமனை ஒன்றிற்கு, கடந்த 22ம் திகதி 22 வயது ஆணும், 23 வயது பெண்ணும் ஒரு குழந்தையை ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்த போது, குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஒரு வாரத்திற்கு பின்பு குழந்தை மரணமடைந்தது.

இதன் பின்னர் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் மரணத்திற்கு எதிர்பாராத மூச்சுத்திணறலே காரணம் என தெரியவந்தது. இதனையடுத்து குழந்தையின் பெற்றோரை கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.