போதிய சர்வதேச அனுபவமின்மையே திறமையை வெளிப்படுத்த முடியாமைக்கு காரணம் : சுமேத ஜகத் ரணசிங்க!!

539

OLYMPICS-RIO-ATHLETICS-M-JAVELIN

ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவில் தன்னால் திற­மையை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் போனமைக்கு போதிய சர்­வ­தேச அனு­ப­வ­மின்­மையே காரணம் என இலங்­கையின் ஈட்டி எறிதல் வீரர் சுமேத ஜகத் ரண­சிங்க தெரி­வித்தார்.

36 வீரர்கள் இரண்டு குழுக்­க­ளாக போட்­டி­யிட்ட ஆண்­க­ளுக்­கான ஈட்டி எறிதல் போட்­டியில் 71.93 மீறறர் தூரம் எறிந்த சுமேத ரண­சிங்க ஒட்­டு­மொத்த நிலையில் கடைசி இடத்தைப் பெற்றார்.

கடந்த வருட பிற்­ப­கு­தியில் நடை­பெற்ற தெற்­கா­சிய திறன்காண் போட்­டியில் 83.04 மீற்றர் தூரம் ஈட்­டியை எறிந்து தேசிய சாத­னையை நிலை­நாட்­டி­யி­ருந்தார்.

ஆனால் ஒலிம்­பிக்கில் அவ­ரது ஆற்றல் ஏறத்­தாழ 12 மீற்றர் குறைந்­தி­ருந்­தது.
ஆற்றல் குறைந்­த­தற்கு காரணம் என்­ன­வென ஒலிம்பிக் வீரர்கள் கிரா­மத்தில் சுமே­த­விடம் வினவிய­போது,

தெற்­கா­சிய போட்­டியில் கலந்து கொண்ட சில மாதங்­களில் ஒலிம்பிக் போட்­டியில் பங்­கு­பற்­றிய எனக்கு போதிய அனு­பவம் இல்லை. மேலும் இத்­த­கைய உய­ரிய போட்­டியில் பங்கு­பற்­றி­ய­போது என்னில் ஒரு பதற்றம் நில­வி­யது.

இதன் கார­ண­மாக என்னால் ஆற்­றலை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் போனது. ஆனால் இவ் விளையாட்டில் ஈடு­படத் தொடங்கி குறு­கிய காலத்தில் ஒலிம்பிக் தேர்ச்சி மட்­டத்தை அடைந்­த­தை­யிட்டு திருப்தி அடை­கின்றேன்’’ என்றார்.

எதிர்­காலத் திட்டம் என்­ன­வென அவ­ரிடம் கேட்­ட­தற்கு, ‘‘எதிர்­கா­லத்தில் பட்டப் படிப்பில் அதிக கவனம் செலுத்­த­வுள்ளேன். இத­னி­டையே ஈட்டி எறி­த­லுக்­கான பயிற்­சியில் ஈடு­ப­டுவேன். ஆசிய விளை­யாட்டு விழா, பொது­ந­ல­வாய விளை­யாட்டு விழா ஆகிய போட்­டி­களை இலக்­காகக் கொண்டு பயிற்­சி­களில் ஈடு­ப­ட­வுள்ளேன்’’ என பதி­ல­ளித்தார்.

இதே­வேளை, சுமேத போன்ற வீரர்­க­ளுக்கு பிர­தான சர்­வ­தேச மெய்வல்­லுநர் போட்­டி­களில் பங்குபற்ற வாய்ப்பு வழங்குவது மிக அவசியம் எனவும் அதன் மூலமே ஆற்றல் அதிகரிக்கும் எனவும் பயிற்றுநர் பிரதீப் நிஷான்த தெரிவித்தார்.