வவுனியா மத்திய பேரூந்து நிலையம் அமைந்துள்ள பகுதியைச் சூழ்ந்துள்ள பகுதியில் குடிகாரர்களின் அட்டகாசம் அதிகமாகக் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
பேரூந்து நிலைய கடைத்தொகுதிக்குச் செல்லும் படிக்கட்டுகளில் இரவு வேளைகளில் இனம்தெரியாத நபர்கள் ஒன்று சேர்ந்து மதுபானம் அருந்துவதாகவும், மதுபானப் போத்தல்களையும் அவ்விடத்திலேயே விட்டுவிட்டுச் செல்வதாகவும் தெரிவிக்கும் மக்கள்,
இதனால் இரவு வேளைகளில் கடைத்தொகுதிக்குச் செல்ல பெண்கள் அஞ்சுவதாகவும், வேலை முடித்து வீடு செல்லும் பெண்களும் இதனால் பாதிக்கப்படுவதாகவும், நகரின் மத்திய பகுதியில் இடம்பெறும் இவாறான சமூக சீர்கேடுகளை உரியவர்கள் உடனடியாகத் தலையிட்டு நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
படிக்கட்டுகளில் சாராயப் போத்தல்கள், சிகரெட் துண்டுகளின் எச்சங்கள் காணப்படுவதுடன், சில இடங்களில் சிறுநீரும் கழிக்கப்பட்டிருப்பதால் அவ்விடத்தில் துர்நாற்றம் வீசுவதை அவதானிக்க முடிகின்றது.